மனிதம்.. உறவுகளை நேசிப்போம்... சிறுகதை
என்னங்க...!! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்,இல்ல உங்க அம்மா இருக்கணும்.... யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க".. என்ன லதா என்ன பண்ணுச்சி அந்த கிழவி. நீ ஏன் டென்சனாகுறே....!! எனக்கு பிடிக்கலை அவ்வளோ தான்.....!! சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க..... மறுநாள் காலை.....!! அம்மா நீ சீக்கிரம் கிளம்புமா..!! " எங்கேடா மகேஷ்.....??? " " உன்னை ஹோம்ல சேர்த்துடுறேன் மா...!! அங்கே உனக்கு எல்லா வசதியும் கிடைக்கும்.....!! உன்னை போல நிறைய பேர் இருப்பாங்க....!! அவங்க கூட நீ சந்தோசமா இருக்கலாம் மா......! மகேஷ் எனக்கு இங்க என் பேரக்குழந்தைங்க கூட இருக்கறதுதான்டா சந்தோசம்......!! உங்கப்பா சாகும்போது உனக்கு வயசு எட்டு....!! உன்ன வளர்க்க நான் பட்ட கஷ்டம் சொல்லி புரியாது...!! எல்லா கஷ்டமும் தீர்ந்து, இப்போதான் நான் பேரக்குழந்தைங்க கூட கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்டா.....!! என் கடைசி காலத்தை இங்கேயே கழிச்சிட்டு போயிடுறேன்டா...!! " உன்னை இப்போ விளக்கம்லாம் கேக்கல நான்....!! உயிரை வாங்காமல் கிளம்பு... "என்று கொஞ்சம் அதட்டல் தோனியில் மகேஷ் சொல்ல, கலங்கி போய் நின்றாள்